மூலிகை மருத்துவர்கள் பகுதி -3



 மூலிகை மருத்துவர்கள் 


பகுதி -3


வேம்பு 



மேலை நாட்டவர்களால் கவர நினைக்கப்பட்டு, பின் முறியடிக்கப்பட்ட  நமது பாரம்பரிய சொத்து.  அம்மனுக்கு அருள் வந்தாலும் , அருளுக்கு அம்மன் வந்தாலும் முதலில் தேட வேண்டியது வேப்பிலையை தான்.  சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து , விஷ காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை வரை ,  'ஆன்ட்டிசெப்டிக் ' ஆகவும்  பலன் தரும் .  வேம்பிலுள்ள ' azadirrachtin' வேதி பொருள் மண்ணையும் உணவு பயிரையும் கூட காக்கும் உயிர் மருந்தாகும் .


நிலவேம்பு 



இதை 'காய்ச்சலுக்கு கை மருந்து எனலாம் ' காய்ச்சலை உடனடியாக குறைக்கும் நிலவேம்பு,  காய்ச்சலை தரும் காரணியை செயலிழக்க செய்யும் ஆற்றல் படைத்தது.  உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர்  உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நிலவேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து  கஷாயமிட்டு 100மி .லி . அளவு இரு வேலை கொடுக்க ஜுரம் நீங்கும் .


கீழாநெல்லி 



தமிழனை தரணியில் தலைநிமிர செய்த மூலிகை.  ஹெபடைடிஸ் -பி  எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க , வைரஸ் செயல்திறனை அழிக்க , கீழாநெல்லிக்கு இணை  கீழாநெல்லிதான் , மருத்துவ அறிவியல் கொடுத்த அங்கீகாரம் இது. 

சீந்தில் 



குடிசி வேர் என்றும் இதற்கு பெயர் உண்டு.  தமிழகம் முழுவதும் பரவலாக  வளரக்கூடிய இக் கொடி ,  பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு , 'அலர்ஜி ' எனும் ஒவ்வாமை நிலையில் நோய் எதிர்ப்பாற்றலை சீர்படுத்த  பணி சிறப்பு .  ரத்த சர்க்கரை அளவை சீந்தில் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய்யாளிகள் கவனிக்க ....


PLEASE ENTER YOUR VALUABLE COMMENT,
WITH YOUR REACTION ,..

Thanks for your visiting 

Comments

Post a Comment