சஹாரா பாலைவனம்

          

சஹாரா 

Sahara desert 





        சகாரா பாலைவனம் என்பது ,வடஆப்பிரிக்காவில் உள்ளது .இதன் பரப்பளவு 92,00,000 சதுர கிலோமீட்டர்  (36,00,000) மைல் .  இதன் பரப்பளவு அமெரிக்க நாட்டின் அளவுக்கு பெரியதாகும் .   உலகில் அதிக வெப்பம் கொண்ட பாலைவனம் ஆகும் .  உலக பாலைவனங்களில்  சகாரா  பாலைவனம் மூன்றாவது பெரிய பாலைவனம் ஆகும் .  உலகின் முதல் மிக பெரிய நிலப்பரப்பை கொண்ட பாலைவனம் அண்டார்டிகா மற்றும் இரண்டாவது மிக பெரிய  பாலைவனம் ஆர்டிக் ஆகும் .

         


   சகாரா பாலைவனத்தின் பெயர் அரபிக் மொழியில் சக்ரா (sahra ) என்ற வார்த்தையில்  இருந்து வந்தது .இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்தது .  அதற்கு முன் இங்கே ஏரிகளும், பாறைகளும் இருந்தன இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக்  கடல் பகுதி,   அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய நிர்ப்பரப்புகளில் இணைக்கின்றது.   இங்குள்ள சில மணல்குன்றுகள் கிட்டத்தட்ட 180 மீ (1590 அடி) உயரம் வரை இருக்கும்.  
           



   மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு முன்னதாக பனியுகத்தில் சகாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்துவந்தார்கள்.   அப்போது,  சாகாராவில் முதலைகளும் 30,000 க்கும் மேற்பட்ட நீர்வாழுயிரினங்களும்  கண்டறியப்பட்டன  .    நவீன சஹாராவில்,  நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை .   பூமியின்  அச்சு  மற்றும் வெப்பநிலை காரணமாக மணற்பாங்கான  ,  பாலைவனம் ஆக மாறியது.

சஹாராவில்  உயிரினங்கள் 

 


சஹாரா  பாலைவனம் ,  மனிதர்கள் வாழ்வதற்கு கடினமான சூழ்நிலை கொண்ட இடமாகும் .  ஆனால் ,  மனிதர்களும், விலங்குகளும்  நீர் இருக்கும் சில இடங்களில் வாழ்ந்துவருகின்றனர் .  




இந்திய ஒட்டகங்களும் , ஆடுகளுமே  இப்பாலைவனத்தில் , அதிகம் காணப்படுகின்றன .   சஹாரா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமான நில  பகுதியாகவே இருந்தது , இப்பொது பல்வேறு பருவகால  மாற்றங்களால் பாலைவனமாக மாறியுள்ளது , பல்வேறு நீர்வாழ்  உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன . 




 பாலைவனத்தின் நிலப்பரப்பானது  சற்று அதிகரித்து கொண்டும் குறைந்து கொண்டும்  , அளவில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும் .  வரும் காலங்களில்  பூமி முழுமையும் பாலைவனமாக மாறவும் சாத்திய  கூறுகள்  உள்ளன .

சஹாராவில் 20,00,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .  சஹாரா 75% மணற்பகுதியாகவும்  மற்ற பகுதிகள் மலைகளும் , எரிமலைகளும் , நீர்நிலைகளும் உள்ளன . 


சஹாராவில்  பகல் நேரம் வெப்பம் 58டிகிரி செல்சியஸ்  ஆகவும் ,  இரவில் குளிர்  6டிகிரி  செல்சியஸ்  முதல் 8டிகிரி செல்சியஸ் வரை இறக்கும். சஹாராவில் ஒரு ஆண்டுக்கு 1 செ . மீ  மழை  தான்  பொழிகிறது எனவே சஹாரா ஒரு வறண்ட  பாலைவனமாக காணப்படுகிறது .  


சஹாராவின் கண் 


சஹாராவின் கண் எனப்படுவது , பாலைவனத்தில் அமைந்துள்ள வட்ட வடிவ அமைப்பாகும் .  இதனை பற்றிய தெளிவான விவரம் கிடைக்கவில்லை . முக்காலத்தில்  வாழ்ந்த மக்களின் கட்டிட கலையாகவோ அல்லது பூமி உள்வாங்கி இருக்கலாம்  என கருத்துக்கள் எழுந்துள்ளன .





This content useful or not?  please enter your comment and your experience  with us.

Comments