மூலிகை மருத்துவர்கள்- பகுதி -1






மூலிகை  மருத்துவர்கள் 





பகுதி -1


               காலம்  காலமாக  நோய்களைத்  தீர்க்கும்  மருத்துவ ஆற்றல்  கொண்ட மூலிகைகள்  படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

சுக்கு 



தினமும்  காலையில் காபித்  தூளுக்கு  பதிலாக  சுக்குத்  தூளும், மல்லித் தூளும் போட்டு, கருப்பட்டி  கலந்து  காபி  சாப்பிட  மூக்கடைப்பு , தலைவலி ,உடல்  பித்தம்  காணாமல்  போகும்.  சுக்கை பயன்படுத்தும் போது  மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

மிளகு



"தோல் நோய் ", "நோய்  எதிர்ப்பு தன்மை குறைவு " மற்றும் "நவீன மருத்துவத்தால் தீர்வின்றி தவிப்போர்க்கு மிளகு ஒரு அருமருந்து.  நோய்  எதிர்ப்பு தன்மை கொண்ட (Immuno  Modulation) மிளகை  தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது  அவசியம். ஆஸ்துமா, சைனி சைட்டீஸ், கரப்பான் எனும்  எக்ஸிமா , திடீர்  அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும்  'அர்டிகேரியா ' நோய்க்கு மிளகும் , மிளகில்  ஆனா மருத்துவம்  உதவிக் கரம்  நீட்டும் .

திப்பிலி 



காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலா,  புகை பிடிப்பதால் ஏற்படும்  இருமலா , குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக  இருக்கட்டும் ( primary problem) திப்பிலி இருக்க பயமேன் , என்று கூறலாம்.  திப்பிலியை  வெற்றிலை சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்து பின் காயவைப்பது ) பின் பொடி  செய்து வைத்துக் கொண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இரண்டு மூன்று வேலையில் இருமல் மறையும்.

ஆடாதொடை




நுரையீரல்  மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை , சளி இருமலுக்கு சிறந்த மருந்து.  இதில் உள்ள 'Bromhexine'  சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும்  தொண்டையால்  குரல்  மழுங்கும் நோயிலும் ஆடாதொடை  மிளகு கசாயம்  பலன்  அளிக்கும்.  ஆடாதொடை  உள்  மருந்து.



Comments

Post a Comment